×

டிரைவரை தாக்கி காரை கடத்திய சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

சென்னை: செங்குன்றம் பகுதியில் டிரைவரை தாக்கி காரை கடத்திய விவகாரத்தில் சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை  ராயபுரம், பி.வி.கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜி (27), கால்டாக்சி டிரைவர். கடந்த மாதம் 25ம் தேதி திருவள்ளூருக்கு சவாரிக்கு சென்றுள்ளார்.  பயணியை இறக்கிவிட்ட பிறகு காரில் ஓய்வெடுத்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அம்பத்தூருக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்து  சென்றுள்ளனர். செல்லும் வழியில் அந்த காரில் மேலும் 3 பேர் ஏறியுள்ளனர். பின்னர் 5 பேரும் அங்கிருந்து திருவள்ளூருக்கு செல்ல வேண்டும் என  கூறியுள்ளனர். செங்குன்றம் எல்லம்மன்பேட்டை ஏரிக்கரை அருகே நள்ளிரவில் கார் வந்தபோது 5 பேரும் சேர்ந்து டிரைவர் ராஜை உருட்டுக்கட்டை  மற்றும் கம்பியால் தாக்கி, அவர் அணிந்திருந்த வெள்ளி செயின், மோதிரம் மற்றும் பிரேஸ்லெட், 2 செல்போன் மற்றும் 4 ஆயிரம் பணத்தை  பறித்துக்கொண்டு கீழே தள்ளிவிட்டு காரை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து டிரைவர் ராஜி அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று  செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் மற்றும் ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த அரவிந்த் (23), புழல் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்  (18), கதிர்வேடு பகுதியை சேர்ந்த சதீஷ் (32) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ராஜியின் காரையும் பறிமுதல்  செய்தனர்.

Tags : children ,Five ,assault driver , Five arrested, including children, assaulting driver
× RELATED J.பேபி