திருவனந்தபுரம்: மரடு அடுக்குமாடி குடியிருப்பை தகர்ப்பதற்காக கட்டிடங்கள் முழுவதும் வெடிபொருட்களால் நிரப்பப்பட்டுள்ளது. மரடு அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட உள்ளதால் அப்பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த குழுவினர் ஏற்கனவே குடியிருப்பை ஆய்வு செய்தனர்.