திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் மரடு குடியிருப்பு சற்றுநேரத்தில் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளது. விதிகளை மீறி கட்டப்பட்ட 343 வீடுகளை இடித்து தடைமட்டமாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கட்டிடத்தை சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு 200 மீட்டர் தொலைவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.