மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 1168 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1029 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 114.33 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 113.76 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 83.86 டிஎம்சியாக உள்ளது.