×

திருச்சி அருகே பரிதாபம் போலி மது குடித்த 2 பேர் பலி : ஒருவருக்கு தீவிர சிகிச்சை

தா.பேட்டை: திருச்சி அருகே மது குடித்த 2 பேர் பலியானார். ஒருவர் மருத்துவமனையில்தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே கண்ணனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (55), சரவணன் (30), சதீஷ் (30). கூலித்தொழிலாளர்களான 3 பேரும் கண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் திருட்டுத்தனமாக அனுமதியின்றி விற்கப்படும் மது பாட்டில் ஒன்றை வாங்கி அந்த பகுதியில் 3பேரும் பங்கிட்டு குடித்துள்ளனர். சதீஷ் மட்டும் சொந்த வேலை காரணமாக துறையூருக்கு சென்றுள்ளார். இதில் மது குடித்த சிறிது நேரத்திலேயே சரவணனும், தாமோதரனும் சுருண்டு கீழே விழுந்தனர். சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய தாமோதரன் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

துறையூருக்கு சென்ற சதீஷ் அந்த பகுதியில் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்த அப்பகுதியினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் இறந்துபோன உடல்களை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சதீஷிடம் இது குறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : Trichy , 2 dead , drinking fake alcohol , Trichy
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...