×

அரசு பள்ளியில் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை : நாமக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நாமக்கல்:  அரசு பள்ளியில், 2ம் வகுப்பு மாணவனை மலம் அள்ள வைத்த வழக்கில், ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாமக்கல் ராமபுரம்புதூர் காலனியை சேர்ந்த 7 வயது சிறுவன், அங்குள்ள அரசு நடுநிலைப்பளியில் 2ம்  வகுப்பு படித்து வந்தான். கடந்த 2015 நவம்பர் 12ம் தேதி, வகுப்பறையில் ஆசிரியை விஜயலட்சுமி, அந்த மாணவரை மற்றொரு மாணவரின் மலத்தை அள்ள வைத்துள்ளார். இதுகுறித்து மாணவரின் தந்தை, அப்போதைய நாமக்கல் எஸ்.பி. செந்தில் குமாரிடம்  புகார் அளித்தார்.

இது குறித்து நாமக்கல்  போலீசார், தீண்டாமை தடுப்பு சட்டப்படி விஜயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதையடுத்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த கல்வித்துறை அதிகாரிகள்,  ஆசிரியை விஜயலட்சுமியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தனசேகரன், நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், பள்ளி மாணவரை கொண்டு, மலம் அள்ள வைத்த ஆசிரியை விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1000  அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து, ஆசிரியை விஜயலட்சுமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Teacher ,state school Teacher ,state school , Teacher sentenced , 5 years, state school
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...