×

பல ஆண்டாக எனக்கு பாதுகாப்பு வழங்கிய சிஆர்பிஎப் வீரர்களுக்கு இதயபூர்வ நன்றி : மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த பல ஆண்டுகளாக எனக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த சிஆர்பிஎப் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவோரிடம் இருந்து பல்கலைக் கழகங்களையும், மாணவர்களையும் பாதுகாக்க சிஆர்பிஎப் வீரர்களைப் பயன்படுத்த வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : CRPF ,veterans ,MK Stalin , CRPF veterans , provided me , security over the years
× RELATED ஓராண்டு கடந்தும் மணிப்பூர் இன்னனும்...