×

பைக் மீது லாரி மோதி விபத்து பொங்கல் பரிசு வாங்க சென்ற மனைவி உடல் நசுங்கி சாவு : கணவன் கண் முன் பரிதாபம்

சென்னை: செங்குன்றம் அருகே பைக் மீது லாரி மோதியதில் கணவனுடன் பொங்கல் பரிசு வாங்க சென்ற பெண் உடல்நசுங்கி பலியானார்.
செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் நகரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி மகாலட்சுமி (45). தம்பதி இருவரும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பாக சென்னை வியாசர்பாடி, சர்மா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக நேற்று காலை 10 மணியளவில் இருவரும் செங்குன்றத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு சாலை அருகே பைக் வந்தபோது பின்னால் வந்த லாரி பைக் மீது வேகமாக மோதியது.

இதில் மகாலட்சுமி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது வயிற்று பகுதியில் லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விநாயகமூர்த்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் தனது கண்முன்னே மனைவி பலியானதை பார்த்து விநாயகமூர்த்தி கதறி அழுதார். தகவலறிந்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து மகாலட்சுமி சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : death ,bike A bike accident , Lorry collides ,bike accident
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...