×

குழந்தையை விற்க முயன்ற தாய் சுற்றிவளைத்து கைது

புழல்: புழல், புனித அந்தோணியார் நகரில் 2 மாத கைக்குழந்தையை ஒரு பெண் விற்க முயற்சி செய்வதாக நேற்று முன்தினம் மாலை, புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்செல்வி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை மடக்கி பிடித்து, குழந்தையுடன் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், புழல் காந்தி பிரதான சாலையை சேர்ந்த உமாராணி (43) என்பதும், தனக்கு பிறந்த குழந்தையை சென்னையை சேர்ந்த ஒருவருக்கு விலை பேசி விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து புழல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைக்குழந்தையை விற்க முயன்ற தாய் உமாராணியை கைது செய்து, யாருக்கு விற்க முயன்றார்? என விசாரித்து வருகின்றனர். மேலும் 2 மாத கைக்குழந்தையை மீட்டு, அப்பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : baby , Child, Mother, Arrested
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…