சென்னை: பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலவும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கப்படுவார்கள் என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பற்றிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர். சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் சேகர்ராம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளனர்.