கோவை: ஜல்லிக்கட்டு நடத்த விண்ணப்பித்தவர்களுக்கு பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த விண்ணப்பித்த அனைவருக்கும் கால்நடைத்துறை சார்பில் பரிசீலனை செய்து அனுமதியளிக்கப்படும் என கூறியுள்ளார்.