மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை கடந்த ஆண்டு போல் குழு அமைத்து நடத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து நடத்தலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இது தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.