சென்னை: கடந்த பல ஆண்டுகளாக இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கிய சி.ஆர்.பி.எஃப், காவலர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதுவரை எனக்கு அளிக்கப்பட்ட உச்சக்கட்ட பாதுகாப்பிற்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு நன்றி. சி.ஆர்.பி.எஃப் வீரர்களைக் கொண்டு பல்கலை., மாணவர்களை வன்முறையிலிருந்து அரசு பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.