சென்னை: மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வேண்டாம் என கருதியதால் தான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் பல்வேறு உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.