ஸ்ரீவில்லிபுத்தூர்: பேராசிரியை நிர்மலாதேவிக்காக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன், வழக்கிலிருந்து விலகியுள்ளார். வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்பதால் விலகுவதாக வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார். மேலும், பதவி ஆசை காட்டியதால் தான் பெண்களை தறவான பாதைக்கு அழைத்தாக நிர்மலாதேவி கூறியதாகவும், உண்மையை கூறினால் மகளை கடத்தி விடுவோம் என மிரட்டல் வந்ததால் நிர்மலாதேவி அமைதியான இருக்கிறார் எனவும் பசும்பொன் தெரிவித்துள்ளார்.