சென்னை: போலி ஆவணங்களை பெற்று பணி வழங்கியதாக முன்னாளர் பேராயர் உள்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பேராயர் அந்தோணிசாமி, கல்வி அலுவலர் உள்பட 7 பேர் மீது எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு இணைச் செயலாளர் மைக்கேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் போலி ஆவணம் மூலம் பணி நியமனம் என மோசடிப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.