கனடா: உக்ரைன் விமானம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலில் விமானம் விழுந்து நொறுங்கியதாக பல்வேறு உளவு பிரிவுகள் தகவல் தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் 82 ஈரானியர்கள், 63 கனடர்கள் உள்பட 176 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.