×

ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: தம்பதி கைது

சென்னை: திருமுல்லைவாயல் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி( 54). இவர் தனது மனைவி இந்திராணியுடன் சேர்ந்து அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தினார். இவர்களிடம் திருமுல்லைவாயல் அண்ணா தெருவை சேர்ந்த சுஜாதா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பணம் கட்டினர். ஆனால் ஏலச்சீட்டு முதிர்வுக்கு பிறகு யாருக்கும் பணம் தரவில்லை.

பாதிக்கப்பட்ட சுஜாதா கடந்த மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தினர். அப்போது, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி இந்திராணி ஆகியோர் தீபாவாளி மற்றும் பொங்கல் பண்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பல லட்சம் பணத்தை ஏமாற்றி தலைமறைவானது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த  தம்பதியை ேநற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.



Tags : Conducting ,Bidding, Couple arrested ,fraud
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...