×

புதுவண்ணாரப்பேட்டையில் போலீஸ் ஏட்டு தற்கொலை

தண்டையார்பேட்டை: ராயபுரம் காவல்நிலைய ஏட்டு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமு (37). இவர், ராயபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி காமினி (32). தம்பதிக்கு ஹாசினி (7) மற்றும் ஒன்றரை வயதில் ஹசிகா என்ற 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு ராமு வீடு திரும்பினார். குடும்பத்துடன் உணவு சாப்பிடும்போது கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு இருவரும் குழந்தைகளுடன் தூங்க சென்றுவிட்டனர்.

நள்ளிரவு திடீரென எழுந்த மனைவி அருகில் கணவன் இல்லாததால், பக்கத்து அறைக்கு சென்று பார்த்தபோது கணவன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார்.தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமுவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்னை காரணமாக ஏட்டு தற்கொலை செய்தாரா, அல்லது உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமா?, என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags : Police suicide , putuvannarappettai, Suicide ,police
× RELATED புதுவண்ணாரப்பேட்டையில் போலீஸ் ஏட்டு தற்கொலை