சென்னை: கோயம்பேடு முதல் கேளம்பாக்கம் வரை இயக்கப்படவுள்ள ஏசி வசதி கொண்ட பேருந்தில் அமர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் ஏசி சொகுசு பேருந்தை பார்வையிட்டார். துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் பேருந்தை பார்வையிட்டனர்.