×

பள்ளிபாளையத்தில் நெல் அறுவடை துவக்கம்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர். மேட்டூர் அணை கிழக்கு கரை கால்வாய் பாசன பகுதியான பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கால்வாய் கரையோரமுள்ள முன்பட்ட வயல்களில் நெல் அறுவடை, தற்போது துவங்கியுள்ளது. இந்த ஆண்டில் பூச்சிநோய் தாக்குதல் இல்லாததால் நெல் மணிகள் தரமாகவும், மகசூல் அதிகமாகவும் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அறுவடை இயந்திரங்கள் வராத நிலையில், தற்போது விவசாய கூலி தொழிலாளர்களே அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகை நேரத்தில் இயந்திர அறுவடையும் துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வயலில் சேறு இல்லாத வகையில் தண்ணீர் வடிக்கப்பட்டு உள்ளதால், நெல் மணிகள் சேற்றில் சிக்கி வீணாகாமல் சேதாரம் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Tags : School School , Inauguration ,Paddy Harvest, School
× RELATED சில்லக்குடி அரசு பள்ளி ஆண்டு விழா