×

பழநி மலைக்கோயிலில் உண்டியல் வசூல் ரூ.2.57 கோடி

பழநி:பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.57 கோடி கிடைத்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 25 நாட்களுக்கான உண்டியல் எண்ணிக்கை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடந்தது. கோயில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்க பணமாக ரூ.2 கோடியே 57 லட்சத்து 41 ஆயிரத்து 520 கிடைத்தது.

தங்கம் 670 கிராம், வெள்ளி 12 ஆயிரத்து 300 கிராம், வெளிநாட்டு கரன்சி 545  ஆகியவை கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் சேகர், முதுநிலை கணக்கியல் அதிகாரி மாணிக்கவேல் உள்ளிட்டோர் கண்காணிப்பு செய்தனர்.

Tags : Palani Hills , Palani Hill Temple, Bundle Collection
× RELATED கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் 60 அடி...