×

செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் இரயில் பெட்டிகள் குறைக்கப்பட்டதால் 500 பயணிகள் போராட்டம்

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் இரயில் பெட்டிகள் குறைக்கப்பட்டதாக கூறி 2வது நாளாக 500 பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுச்சேரி-சென்னை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரயிலில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இரயில் இயக்கப்பட்டு வந்தது. இதனை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 பெட்டிகள் குறைக்கப்பட்டு 8 பெட்டிகளுடன் இயக்கப்படுவதால் ஆத்திரமடைந்த பயணிகள் இரயிலை மறித்தனர்.

இதனால் இரயில் பெட்டிகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இரயில்வேத் துறை அதிகாரிகள் பேச்சி வார்த்தை நடத்தியத்தைத் தொடர்ந்து 1 மணி நேரத்துக்கு பிறகு பயணிகள் இரயில் தாமதமாக புறப்பட்டது.


Tags : commuters ,Chengalpattu district ,railway derailment , Chengalpattu District Maduranga, Railway Boxes, Travelers, Struggle
× RELATED வருவாய்துறை அதிகாரிகளை கண்டித்து...