×

தேர்தல் தகராறு; கோஷ்டி மோதல்

சென்னை: சென்னை அடுத்த மீஞ்சூர் சிமாபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நர்மதா யோகேஷ்குமார், நிர்மலா சுப்பிரமணி, மல்லிகா கோவிந்தராஜ் ஆகிய 3 பெண்கள் போட்டியிட்டனர். இதில் நர்மதா யோகேஷ்குமார் தேர்வு பெற்றார். மற்ற 2 பெண்களும் தோல்வியடைந்தனர். இதில் கோஷ்டி மோதல், ஏற்பட்டது.  இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் யோகேஷ்குமாரின் தரப்பை சேர்ந்த ஹரிநாத், பூபாலன், சுப்பிரமணி ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் ஒரு கடையில் டீ குடித்தபோது செந்தில்முருகன், அருள்முருகன், ராஜேந்திரன் ஆகியோர் அவர்களை தாக்கினர்.புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்முருகன், செந்தில்முருகன் ஆகிய இருவரை கைது செய்தனர்.


Tags : Election dispute; Clash of Clans
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...