×

கொதிக்க கொதிக்க கொடுத்ததால் ஆத்திரம் சிஆர்பிஎப் வீரர் மீது வெந்நீர் ஊற்றிய டிஐஜி

புதுடெல்லி:  வீரர் மீது வெந்நீர் ஊற்றியதாக சிஆர்பிஎப் டிஐஜி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பீகார் மாநிலம், ராஜ்கிர் மாவட்டத்தில் மத்திய ஆயுதப் படை போலீஸ் (சிஆர்பிஎப்) பயிற்சி மையம் அமைந்துள்ளது. சிஆர்பிஎப் துணை இயக்குனர் ஜெனரல் டி.கே.திரிபாதி, அலுவலக பணிக்காக இங்கு வந்து தங்கினார். நேற்று முன்தினம் அவர் பயிற்சி மையத்தின் உணவகத்தில் இருந்து குடிப்பதற்கு வெந்நீர் கொண்டு வரும்படி கூறினார். அப்போது, அங்கு பணியில் இருந்த வீரர் அமோல் காரத், திரிபாதிக்கு வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

சூட்டை தாங்கும் பிளாஸ்க்கில் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்ததால் தண்ணீர் சூடாக இருப்பது தெரியாமல், திரிபாதி அதை வாயில் ஊற்றியுள்ளார். இதனால் அவருடைய வாயில் காயம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அவர்,அமோல் காரத்தை கடுமையாக திட்டினார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், பிளாஸ்க்கில் இருந்த வெந்நீரை அமோல் முகத்தில் திரிபாதி ஊற்றியதாக தெரிகிறது. இதனால், அமோலின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முதல்கட்ட விசாரணையில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தற்செயலாக வெந்நீர் கொட்டியதாக கூறப்பட்டுள்ளது.

விசாரணையின் முழு விவரமும், பரிந்துரைகளும் நாளை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தை சேர்ந்த அதிகாரி கூறுகையில், பிளாஸ்க்கில் இருந்து தவறுதலாக வெந்நீர் கொட்டி விட்டதாக பாதிக்கப்பட்ட வீரரிடம் அழுத்தம் கொடுத்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அந்த வீரர் தனது குடும்பத்தினருடன் பேசுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. அவரிடம் இருந்த செல்போன் பறிக்கப்பட்டுள்ளது, என்றார்.


Tags : player ,CRPF , DIG pouring hot water ,CRPF player
× RELATED ஐசிசியின் பிப்ரவரி மாதத்திற்கான...