×

உள்நாட்டு தயாரிப்பு விமானம் தாங்கி கப்பல் 2021ல் ராணுவத்தில் சேர்கிறது விக்ராந்த்

புதுடெல்லி : உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பலான ‘விக்ராந்த்’ வரும் 2022ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும் என்று கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கடந்த டிசம்பர் 3ம் தேதி தெரிவித்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த கப்பல் ராணுவத்தில் சேர்க்கப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கேரளாவில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை  கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, கப்பலின் 3ம் கட்ட கட்டுமான பணி நடைபெறுகிறது. இயந்திரங்கள், கருவிகள் பொருத்தும் பணி, திறன் உற்பத்தி ேசாதனை ஆகியவை நடைபெற்று வருகிறது. இந்த கப்பல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ராணுவத்தில் சேர்க்கப்படும். கடல் மற்றும் துறைமுக சோதனை நடைபெற்ற பின்னர், விமானப்படை சோதனைக்கு இந்த விமான்ம தாங்கி கப்பல் உட்படுத்தப்படும்,’’ என்றார்.

Tags : INS Vikrant ,military ,aircraft carrier , INS Vikrant, joinin 2021
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...