×

கொரோனா தொற்றால் எஸ்ஐ பலி

தண்டையார்பேட்டை: கொத்தவால்சாவடி காவல் நிலைய போக்குவரத்து புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக  பணிபுரிந்து வந்தவர் சக்திவேல் (57). இவர், கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன்  வசித்து வந்தார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி, தேனாம்பேட்டையில் உள்ள சுகாதார மையத்தில் பணிபுரிந்து வருகிறார். தம்பதிக்கு கமலேஷ், முரளி என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 9ம் தேதி சக்திவேலுக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்கள் முன்னிலையில் மூலக்கொத்தளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது….

The post கொரோனா தொற்றால் எஸ்ஐ பலி appeared first on Dinakaran.

Tags : SI ,Thandaiyarpet ,Sakthivel ,Kothawalchavadi police station ,Kondithoppu ,
× RELATED டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது