×

விமான நிலையத்தில் பரபரப்பு 59 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: சிங்களர்கள் உள்பட 4 பேர் கைது

மீனம்பாக்கம்:  இலங்கையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனை நடத்தினர். அப்போது இலங்கையை சேர்ந்த லசந்தா சங்கா (28), முகமது ருஸ்னி (27), என்ற சிங்களர்கள் மற்றும் திருச்சியை சேர்ந்த சிவகுரு (33) ஆகிய மூன்று பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிங்களவர்கள் இருவரும் சுற்றுலா பயணியாக சென்னை வந்தனர். சிவகுரு இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு வந்திருந்தார்.இதையடுத்து சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்து 1 கிலோ 13 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு 41.45 லட்சம். இதற்கிடையே நேற்று அதிகாலை 4.30 மணிக்கு துபாயில் இருந்து இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்கரீம் (41) சுற்றுலா பயணியாக துபாய் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அவரை சோதனை செய்து அவரது உள் ஆடையில் இருந்து 431 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு 17.63 லட்சம். அவரையும் கைது செய்தனர்.



Tags : airport ,Sinhalese ,smuggling , Airport, smuggling gold, Sinhalese, 4 arrested
× RELATED அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்