ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், குடிநீர் தூய்மைப் படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை குறித்தும் தனியார் மருத்துவமனையில் பயிலும் முதலாமாண்டு செவிலியர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் செல்வபாலாஜி தலைமை தாங்கி பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், குடிநீர் தூய்மை படுத்துதல் மற்றும் குளோரின் உபயோகிப்பது, திடக்கழிவு மேலாண்மை குறித்தும் செவிலியர்களுக்கு விளக்கி கூறினார். இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் முருகன், துப்புரவு ஆய்வாளர் தேவிபாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.