×

புதுகை அருகே பயங்கரம் ஓட்டல் உரிமையாளர் வெட்டி கொலை: மர்ம கும்பலுக்கு வலை

புதுக்கோட்டை:  கொத்தமங்கலத்தில் ஓட்டல் வியாபாரம் முடிந்து வீட்டுக்குச் சென்ற உரிமையாளரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் அடுத்த கொத்தமங்கலம் மேற்கு பாரதிநகரை சேர்ந்த முத்தையா மகன் ரமேஷ் (35). இவர் கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் தனது தந்தையின் ஓட்டலை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தை உள்ளது. நேற்றிரவு இரவு 10 மணிக்கு பின்னர் வியாபார பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டலை பூட்டிவிட்டு  சுமார் 2 கி. மீ. தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு தனியாக பைக்கில் சென்றுகொண்டிருந்தார். வீட்டருகே 500 மீட்டர் தூரத்தில் வந்தபோது அங்கு நின்ற மர்ம  கும்பல் சுரேஷை வழிமறித்து சரமாரியாக வெட்டி தள்ளிவிட்டு தப்பிச் சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சுரேஷ் அலறிய சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டு வந்தனர். அப்போது சுரேஷ் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த சுரேஷின் குடும்பத்தினர், மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தகவலறிந்து கீரமங்கலம் போலீசார் அங்கு வந்து விசாரனை நடத்தினர்.  பின்னர் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து சுரேசுக்கு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.  மர்ம நபர்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் கொலையாளிகள் விரைவில் சிக்க வாய்ப்பு உள்ளதாக  போலீசார் தெரிவித்தனர்.

Tags : hotel owner ,death ,mystery gang , Terrorist hotel,hacked,death, mystery gang
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு