×

ஆபாச படத்தில் இருப்பது யார்? குமரி பேராசிரியைக்கு டார்ச்சர்

*  கணவருக்கு போலீசார் பளார்
* கவுன்சிலிங் கொடுக்க அறிவுரை

மார்த்தாண்டம்: ஆபாச படத்தில் இருப்பது யார்? என்று பேராசிரியையான மனைவியிடம் கேட்டு டார்ச்சர் செய்தவருக்கு போலீசார் பளார் விட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருமனை பகுதியை சேர்ந்தவர் ராபின் (34, பெயர் மாற்றம்). 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆனி (30, பெயர் மாற்றம்). குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் இருக்கும் போது ராபினுக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி அவ்வப்போது ஆபாச படம் பார்ப்பது வழக்கமாம். இப்படி ஒரு முறை பார்த்த போது ஆபாச படத்தில் வந்த ஒரு பெண் தனது மனைவி சாயலில் இருப்பதாக ராபினுக்கு தோன்றியது.அதன் பிறகு மனைவி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மனைவியிடம் பேசி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார் ராபின். அப்போது சந்தேக கண்ணோட்டத்துடனேயே மனைவியுடன் பழகி வந்துள்ளார்.

அவ்வப்போது இதுதொடர்பாக அவரிடம் கேட்டும் வந்துள்ளார். இது அவர்களுக்கு இடையே மனகசப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால் இது குறித்து ஆனி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அப்போது கணவரை வரவழைத்து ஆலோசனை கூறும்படி கூறியுள்ளார். இதன்படி போலீசார் ராபினை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது உறவினர்கள் ஏராளமானோர் காவல் நிலையத்தில் திரண்டனர்.விசாரணைக்காக அழைத்து வந்தவரை எப்படி அடிக்கலாம் என்று கேட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ராபினுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kumari Professor , Who is being in, porn, Torcher, Kumari Professor
× RELATED தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது