×

பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டு உள்ள பதற்றத்தால் இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவு

மும்பை: பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டு உள்ள பதற்றத்தால் இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன. தொடக்க நேர வர்த்தகத்தில் 392 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ், இறுதி நேரத்தில் மீட்சி பெற்றது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் குறைந்து 40,818 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தொடக்க நேரத்தில் 123 புள்ளிகளில் சரிந்து இருந்தது. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 28 புள்ளிகள் குறைந்து 12,025 புள்ளிகளில் முடிவடைந்தது.


Tags : Indian ,Persian Gulf , Indian Stock Exchange
× RELATED உன்னத உறவுகள்