மதுரை: மதுரை ஆதீன வளாகத்தில் இருந்த விநாயகர் சிலை திருடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆதீனத்துக்கு அருகில் விடுதி நடத்தி வரும் இளவரசன் என்பவர் அடியாட்கள்களுடன் வந்து சிலையை திருடி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிலையை எடுத்து செல்ல தன்னிடம் நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி இளவரசன் மிரட்டியதாக ஆதீன ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.