×

வெங்கமேடு அம்மன் நகர் முதல் தெருவில் ஜல்லி கற்கள் கொட்டியும் சாலை அமைக்காததால் மக்கள் அவதி

கரூர்: கரூர் வெங்கமேடு அம்மன் நகர் முதல் தெருவில் விரைவில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அம்மன் நகர் முதல் தெரு பகுதியில் பழுதடைந்த சாலையை தார்ச்சாலையாக்கும் வகையில் பெயர்க்கப்பட்டு புதிதாக ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சில காரணங்களால் பணிகள் பாதியில் நிற்கிறது. இதன் காரணமாக இந்த சாலையின் வழியாக நடந்தோ, வாகனங்களில் செல்வதற்கோ பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் திட்டச்சாலை முதல் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளதால் அதிக வாகன போக்குவரத்து இதில் நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று அம்மன் நகர் பகுதியில் தார்ச்சாலை அமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : street ,Amman Nagar ,Venkamedu ,road , Jolly stones, road, people
× RELATED பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு