மதுரை: அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் ஆய்வின் முடிவுகளை வெளியிடக்கோரிய வழக்கில் தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய மாநில தொல்லியல்துறை இயக்குனர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்கக்கோரி ராமநாதபுரம் வழக்கறிஞர் தீரன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அளித்துள்ளது.