×

கிராம உதவியாளராக நியமிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தருமபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு

சென்னை: கிராம உதவியாளராக நியமிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தருமபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து. தருமபுரியின் பாலக்காடு வட்டத்தில் தன்னை கிராம உதவியாளராக நியமிக்க கோரி துரைராஜ் என்பவர் 2007-ல் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் 4 வாரத்துக்குள் தருமபுரி ஆட்சியர் ஐகோர்ட்டில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Dharmapuri Collector ,Darumapuri Collector ,court ,Court of Appeal , Village Assistant, Court Insult Case, Dharmapuri Collector
× RELATED சிறப்பு மையத்தில் தபால் வாக்களித்த அலுவலர்கள்