டெல்லி: இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டுமென இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை பாக்தாத், ஈர்பில் ஆகிய பகுதியில் உள்ள இந்திய தூதரங்கள் செய்கின்றன எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.