×

ஐஎஸ்ஐஎஸ்சுடன் தொடர்பா? நெல்லையில் 3 பேரிடம் என்ஐஏ விசாரணை

நெல்லை: இலங்கையில் கடந்தாண்டு நடந்த குண்டுவெடிப்பில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (என்ஐஏ) விசாரணை நடத்தி மேலப்பாளையத்தை சேர்ந்த  முகம்மதுஇப்ராகிம், நாகையை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   இந்நிலையில் முகமது இப்ராகிமுடன் தங்கியிருந்த மேலப்பாளையம் சமயானா காதர் மீத்தேன் மூப்பன் தெருவைச் சேர்ந்த செய்யது  முகம்மது புகாரி (33), அலவி சாகிப் (31), முகம்மதுஅலி (30) ஆகிய 3 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினர்.  இதுகுறித்து தகவலறிந்த கொச்சி என்ஐஏ அதிகாரிகள் 4 பேர் மூன்று பேரிடமும்  சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து 2 மணி நேரம் விசாரித்தனர்.



Tags : persons ,ISIS ,NIA ,Paddy , ISIS, nellai, NIA
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...