கோவை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டி.எஸ்பி.யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை என சிபிஐ கூறிவிட்டது. ஆனால் அவரது தந்தை ரவி புகாரின்படி கோவை தலை மை குற்றவியல் நீதிமன்றம் தனியாக கடந்த நவம்பர் மாதம் விசாரணையை துவக்கியது. நேற்று மீண்டும் நடந்த விசாரணையில் விஷ்ணுபிரியா தோழியான சென்னை உதவி கமிஷனர் மகேஸ்வரி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, திருவாரூர் டி.எஸ்பி. இனிகோ திவ்யன், ஓய்வுபெற்ற டி.எஸ்பி. முத்தமிழ் முதல்வன் ஆகியோர் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். விசாரணை மீண்டும் நாளை நடக்கிறது.