பலூர்காட்: ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டதுபோன்று, மேற்குவங்க மாநிலம் குமார்கன்ஜில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.மேற்கு வங்கத்தில் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குமார்கன்ஜ் பகுதியில் பாலத்தின் அருகே 17 வயது இளம்பெண்ணின் சடலம் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் முழுவதும் காயங்கள் காணப்பட்டன. இதனால் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் தீவைத்து கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கூறினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் கடைக்கு சென்ற அப்பெண் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.