×

நடுரோட்டில் ஓடஓட விரட்டி 2 வாலிபர்களுக்கு சரமாரி வெட்டு: தப்பிய ஆசாமிக்கு வலை

பெரம்பூர்: வியாசர்பாடி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (22). இவரது நண்பர் கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த முரளிதரன் (28). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் வியாசர்பாடி 3வது பள்ளத்தெரு பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாலகுமார் என்பவர், இவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது, பாலகுமார் மறைத்து வைத்திருந்த அளிவாளால் சாந்தகுமார் மற்றும் முரளிதரனை வெட்ட முயன்றார். சுதாரித்துக்கொண்ட இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீட்டிற்குள் ஓடினர். விடாமல் துரத்தி சென்ற பாலகுமார், சாந்தகுமார் மற்றும் முரளிதரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த வியாசர்பாடி போலீசார் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சாந்தகுமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார். முரளிதரன் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலகுமாரை தேடி வருகின்றனர்.

Tags : men ,road ,teenagers ,Assamese. , Middle, 2 volley, volley cut, asami, web
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!