×

தனியார் அலுவலகத்தில் தீ

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் எஸ்டேட் ரோடு பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் தனியார் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று காலை 10 மணியளவில் உரிமையாளர் சுரேஷ் என்பவர், வழக்கம் போல அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது அலுவலகத்தில் இருந்து கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த சுரேஷ், உடனடியாக கோயம்பேடு தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமானது. திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர்.

Tags : office , Private, office, fire
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...