×

10 சவரன் திருட்டு வழக்கில் 2 கொள்ளையர்கள் கைது: சிசிடிவி கேமரா மூலம் துப்புதுலங்கியது

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி ஜமாலியா சாந்தி காலனியை சேர்ந்தவர் சாகுல் அமீது (62). அதே பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த வாரம் குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இரு தினங்களுக்கு முன் சென்னைக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசில் சாகுல் அமீது புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், 2 பழைய குற்றவாளிகளான அயனாவரம் பகுதியை சேர்ந்த ஞானவேல் (33), ஓட்டேரி பகுதியை சேர்ந்த சரவணன் (28) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : robbers ,shaving robbery ,CBI , 10 shaving theft, 2 robberies, arrest, CCTV camera, spat
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...