டெல்லி: டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்றுள்ளார். மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாடு முழுவது பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்று போராட்டத்துக்கு ஆதரவாக தற்போது நடிகை தீபிகா படுகோன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.