சென்னை: சேலம் ஆத்தூர் நங்கவள்ளியில் பகுதியில் ஐம்பொன் சிலை மீட்கப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். சிலையை கடத்தி விற்க முயன்ற ராஜசேகரன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.