×

மதில் சுவர் இடிந்து விழும் அபாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பிரிந்து செல்லும் பாலக்காடு ரோட்டின் ஒரு பகுதியில் வணிக வளாகம் மற்றும் அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ளன. இதில், பாலக்காடு ரோடு மற்றும் ராஜா மில்ரோடு சந்திக்கும் பிரிவில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதில் சுவரானது, சில ஆண்டுகளுக்கு முன்பு விரிசல் ஏற்பட துவங்கியது.

மேலும், அப்பகுதியில் உள்ள மரங்கள் வளர்ந்து வருவதால், தற்போது மேலும் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே மதில்சுவரின் ஒரு பகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மழையால் இடிந்துள்ளது. ஆனால், தற்போது எந்நேரத்தில் இடியும் நிலையில் உள்ள மதிசுவரை பராமரிக்கவோ அல்லது, புதிய மதில் சுவர் கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : wall , danger , collapsing
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...