×

பாலக்காடு ரோட்டில் பராமரிப்பு இல்லாத பயணிகள் நிழற்குடை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டோரம் உள்ள பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் பொன்னாயூர், கருமாபுரம், நரசிங்காபுரம், ராமபட்டிணம், மண்ணூர், கோபாலபுரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ரோட்டோரம், சுமார் 10ஆண்டுகளுக்கு  முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், இந்த கிராமங்களில், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிழற்குடை, தற்போது பழுதாகி ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் தெரிவதுடன் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

இப்பகுதி பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக, அந்த நிழற்குடைக்குள் நிற்கின்றனர். ஆனால், அந்த நிழற்குடை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், சில நேரங்களில், பஸ் ஏற வரும் பயணிகள் நிழற்குடையின் நிலையை அறிந்து, அதற்குள் நிற்பதை தவிர்க்கின்றனர். இருப்பினும், இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்குடையை பராமரிக்கவோ அல்லது புதிதாக கட்டவோ  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Palakkad , No ,maintenance, Palakkad road
× RELATED ஷொர்ணூர் – நிலம்பூர் ரோடு இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்