×

சாதிச் சான்று வழங்க கோரி பழங்குடியின மாணவர் மனு

ஊட்டி: சாதிச் சான்று வழங்க கோரி அய்யன்கொல்லி கிராமத்தை சேர்ந்த பனியர் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
பந்தலூர் அருகேயுள்ள அய்யன்கொல்லி கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவன் சுமேஷ் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் பனியர் பழங்குடியினத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர் உள்ளோம்.

இதில், பெரியவர்கள் இருவர். மீதமுள்ள 5 பேரும் சிறு வயதுடையவர்கள். எங்கள் குடும்பத்தில் உள்ள 7 பேருக்கும் இது வரை சாதிச்சான்று வழங்கப்படாமல் உள்ளது. நான் தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு பல்வேறு தேவைகளுக்கும் சாதிச்சான்று தேவைப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக எனக்கு சாதிச்சான்று வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் சுமேஷ் கூறியுள்ளார்.

Tags : Aboriginal , Caste, tribal student, petition
× RELATED நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது PSLV C58...