சென்னை: தமிழகத்தில் எந்த நியாய விலைக் கடையும் மூடப்படவில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்தார். 29 நியாய விலைக் கடைகள் மூடப்பட்டு உள்ளதாக திமுக உறுப்பினர் சக்கரபாணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார். மேலும் தமிழகத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க நூலகங்களை ஏற்படுத்த வேண்டும் என திமுக உறுப்பினர் சரவணன் சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.