சென்னை: வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம், மனைவி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அடுத்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.